தென்காசி காசி விசுவநாதர் கோவில் வாசல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இன்று உலக மனநல தினத்தை முன்னிட்டு குற்றாலம் போதி மன மருத்துவமனை சார்பில் தென்காசி காசி விசுவநாதர் கோவில் வாசல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப் பேரணியை போதி மன மருத்துவமனை நிறுவனர் டாக்டர் கார்த்திக் துரைசாமி, பாலாஜி மருத்துவமனை மருத்துவர் பாலாஜி, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கரலிங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் போதி மன மருத்துவமனை மருத்துவர் நீலவேணி கார்த்திக், மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி நிறுவனர் அன்சாரி மற்றும் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தென்காசி