தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இருவர் படுகொலை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஐயப்பன் (திமுக) மற்றும் செல்லதுரை (பிஜேபி) கூலி தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் அடிக்கடி நேருக்கு நேர் மோதிக் கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது செல்லத்துரை ஐயப்பன் மீது வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐயப்பன் குடிபோதையில் செல்லத்துரை வீட்டின் முன் வந்து எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது இதனை அடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது அப்போது செல்லத்துரை தனது வீட்டினில் இருந்த அருவாளை எடுத்து வந்து ஐயப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை கண்ட ஐயப்பனின் மகன் கருப்பசாமி (பதினோராம் வகுப்பு படித்து வருபவர்) அலறி அடித்து ஓடி வந்து செல்லத்துரை வைத்திருந்த கத்தியை பிடுங்கி செல்லதுரையை கத்தியால் குத்தியுள்ளார் இதில் நிலை குலைந்து சரிந்த செல்லத்துரையை ஐயப்பன் மகன் கருப்பசாமி பலமாக தாக்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ஐயப்பனும் செல்லத்துரையும் மரணம் அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலைய போலீசார் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அய்யப்பன் (11ம் வகுப்பு படித்து வரும்)மகன் கருப்பசாமி கைது செய்து விசாரணை செய்துள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல்துறையினர் இரு தரப்பினரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் விரைந்து வந்து பார்வையிட்டார்மேலும் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.