தெருமுனை பிரச்சாரத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் பி.கல்யாணம் பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அஞ்சாறுவார்த்தலை கடைவீதியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆலங்குடி, வில்லியநல்லூர், திருமணஞ்சேரி, கடலங்குடி, வானாதிராஜபுரம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் செல்லக்குட்டி, ஒன்றிய துணை செயலாளர் செந்தில், பொருளாளர் வெடிபாண்டியன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா வைத்தியநாதன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குத்தாலம் க.அன்பழகன், தலைமை பேச்சாளர் கலைமணி பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கல்யாணம் எதிர்வரும் 2024-பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் உதயசூரியனை ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார்.
அப்போது குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயாராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதா வைத்தியநாதன், அறிவுச்செல்வன், கலைச் செல்வி செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வானாதிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன் நன்றி கூறினார்.