தேனியில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கோலாகாலாமாக கொண்டாடப்பட்டது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பட்டாசு வெடித்தும், கொடியேற்றியும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தேனி மாவட்டத்திலும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது .
இதேபோல் தேனி நகரம் சார்பில் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலும், தேனி நகர துணை செயலாளரும் ,புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளருமாகிய சுந்தர பாண்டியன் முன்னிட்டு அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
முதலில் தேனி நேரு சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
இதே போல் தேனி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றியும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது .
மேலும் தேனி நகர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில் தேனி மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி சொக்கலிங்கம்,
தேனி நகர் அவை தலைவர் டெய்லர் கே.முருகேசன்,
தேனி நகர பொருளாளர் மூ.வீரமணி Ex.MC, தேனி நகர இணை செயலாளர் ராஜேஸ்வரி இளையராஜா,
தேனி நகர மாவட்ட பிரதிநிதி Mk.கண்ணன்,
தேனி நகர மாவட்ட பிரதிநிதி Rs.சுரேஷ்,
தேனி மாவட்ட வர்த்தகர் பிரிவு துணை செயலாளர் ஆப்பிள் முருகன் ,
தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்தர்,
தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் G.தினேஷ்குமார் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி நகர கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.