தேனியில் இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு; பொதுமக்கள் அவதி..

தேனியில் இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மாலை பொழுதில் கனமழை பெய்து வருகிறது தற்போது பருவமழை தூங்கி உள்ள காரணத்தினால் தேனியில் கனமழை பெய்து வருகிறது.
ஆங்காங்கே சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால்,
சாக்கடையில் உள்ள அடைப்புகளை தேனி நகராட்சி உடனடியாக சீர் செய்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் கடந்து செல்வதற்கும் ஏற்றவாறு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று மாலை பெய்த கனமழை காரணமாக தேனியின் முக்கிய பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தற்போது தீபாவளி பண்டிகை நாட்களில் துவங்கியுள்ளதன் காரணமாக ரோட்டோட கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த தொடர் மழையின் காரணமாக மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.