தேனி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் நாச்சியார் புரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியின் வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு இன்று ரூ 35.50 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தேனி ஆட்சியர் முரளிதரன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி. ஊராட்சி ஒன்றிய திமுக நிர்வாகிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நாச்சியார்புரத்திற்கு வருகை தந்த தேனி ஆட்சயர் முரளிதரனுக்கு ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.