தேனி அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு.

தேனி அருகேயுள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு போலீசார் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேனி மாவட்டத்தை “போதை இல்லாத” மாவட்டமாக உருவாக்கிட, மதுரை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவர்கள் உத்தரின்படி, திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஸ்குமார் மீனா
தேனி எஸ் பி டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் ஆலோசனைப்படி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேனி மதுவிலக்கு போலீசார் சார்பில் போதை ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஒட்டி பள்ளி மாணவர்கள் இடையே பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை ஒட்டி, போதையினால் ஏற்படுகின்ற இடர்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து மது விலக்கு போலீசார் மாணவ மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.