தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பாக மாவட்ட தலைவர் கிருஷ்ணப்பய யாதவ் தலைமையிலும் மாவட்ட செயலாளர் விஜய் சாரதி முன்னிலையிலும் சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி மாயாண்டி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார்.
ஆடு மேய்க்கும் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காரணம் இன்றி வெட்டி கொல்லப்படுகிறார்கள் உரிய புரிய பாதுகாப்பும் நடவடிக்கையும் எடுக்கக்கோரி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக யாதவர் மகாசபை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி மாவட்ட இளைஞரணி தலைவர் கிருஷ்ணன் சதீஷ் உள்ளிட்ட தமிழ்நாடு யாதவ மகாசபை கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி
TAGS அரசியல்தமிழ்நாடுதமிழ்நாடு யாதவ மகாசபை ஆர்ப்பாட்டம்தலைப்பு செய்திகள்தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்