BREAKING NEWS

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.

செய்தியாளர் மு .பிரதீப்.

 

 mephentermine போதை ஊசி மருந்துகளுடன் கைது. தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர்.

 

தேனி மாவட்டம் போடி சிலமலை அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்று கூடி போதை வஸ்துக்கள் பயன்படுத்தி வருவதாக போடி தாலுகா காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணி அளவில் சார்பு ஆய்வாளர் இத்தீஸ்கான் தலைமையில் காவலர்கள் ஆய்வு மேற்கொண்ட பொழுது சுடுகாட்டில் இருந்து ஆறு இளைஞர்கள் காவலர்களைக் கண்டு தப்பி ஓடினர்.

 

 

தப்பி ஓடிய ஆறு நபர்களை மூன்று இளைஞர்களை தாலுகா காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் சிலமலையைச் சேர்ந்த சுஜித் குமார், திவின் குமார், தங்க தமிழ்வாசன் என்பதும் தெரிய வந்தது.

 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் தப்பி ஓடிய மூன்று இளைஞர்கள் ராசிங்காபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் சிலமலையைச் சேர்ந்த பிரவீன், மற்றும் பரத் குமார் என்பதும் தெரிய வந்தது.

 

 

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடமிருந்து மூன்று ஊசிகள் mephentermine என்ற ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்தையும் கைப்பற்றினார்.

 

இந்த மருந்தானது கர்ப்பிணி பெண்கள் இதய நோய் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கும் பயன்படுத்தக்கூடிய மருந்து.

இந்த மருந்தினை தற்போது இளைஞர்கள் போதை ஊசியாக பயன்படுத்தி வருகின்றனர்.

 

 

போடி தாலுகா காவல்துறையினர் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் இருந்து மருந்து எங்கே வாங்கப்பட்டது மேலும் யாரெல்லாம் இந்த போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்பதை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS