தேனி முதன்மை தபால் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பாக பதிவு தபால் அனுப்பபட்டது.

தேனி மாவட்டம் முதன்மை தபால் அலுவலகம் முன்பாக சிவசேனா கட்சி சார்பாக தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ள நிலையில் தமிழக அரசு சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு 80 கோடி ரூபாய் செலவில் அவரது நினைவிடத்தில் நினைவுச் சின்னமான பேனா சிலையை வைப்பதை நிறுத்த கோரி,
தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பாக பதிவு தபால் மூலமாக குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் மத்திய சபாநாயகருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கும் கலாச்சாரத்துறை அமைச்சருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பி உள்ளனர் இந்த பதிவை தபால் அனுப்பு நிகழ்ச்சியில் சிவசேனா கட்சி மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையிலும் மாவட்ட பொதுச் செயலாளர் முருகவேல் முன்னிலையிலும் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் குரு ஐயப்பன் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் உள்ளிட்ட பத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.