BREAKING NEWS

தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹா கந்தூரி விழா.!

தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹா கந்தூரி விழா.!

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் பான்வாசாஹிப் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இது போல் இந்த ஆண்டும் கந்தூரி விழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

அதனை அடுத்து ஏழாம் நாளான வியாழக்கிழமை கந்தூரி விழா நடந்தது தர்காவில் பாத்திஹா குர்ஆன் ஓதப்பட்டு சீரணி வழங்கப்பட்டது இந்நிலையில் கந்தூரி விழாவை முன்னிட்டு வண்ண வண்ண மின் விளக்குகளால் தர்ஹா அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு தர்காவிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் தப்ஸ் முழங்க புறப்பட்டு அனைத்து வீதிகள் வழியாக மீண்டும் தர்ஹாவை வந்து அடைந்தது பெரும் விமர்சையாக நடைபெற்ற இவ்விழாவை ஊர் நாட்டான்மை பஞ்சாய்த்தார்களும் இஷா அத்துல் இஸ்லாம் சங்கத்தினர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

சுற்றியுள்ள ஊர்களில் உள்ள ஆண்கள் பெண்கள் இந்துமத சகோதரர்களும் பெரும்பாலானோர் மத பாகுபாடு இன்றி பலரும் மத நல்லிணக்கத்தோடு திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க காவல்துறை ஆய்வாளர் சங்கீதா தலைமையில் சிறப்பாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )