நடத்தையில் தீராத சந்தேகம்.. மனைவியை வெட்டி கூறுப்போட்ட கணவர்.. நெல்லையில் பயங்கரம்.!

ராமலட்சுமி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணவரை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (40). ராமலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 15 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இந்த சூழலில் கல்யாணசுந்தரம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்து உள்ளார். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான நெல்லை தெற்கு வாகைக்குளத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
இந்நிலையில், ராமலட்சுமி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமலட்சுமியின் நடத்தை சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.