நடுகல்லூரை சேர்ந்த நம்பி என்பவரை படுகொலை செய்தவர்கள் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாநகரம் பேட்டையிலுள்ள ஜெனி பைப்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுத்தமல்லி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நடுக்கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பி என்பவர் நேற்று இரவு பணிக்காக பேட்டை ஐடிஐ சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரை வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
இக்கொலை வழக்கில் எதிரிகளை கண்டறிந்து கைது செய்யும் பொருட்டு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார், உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாநகர மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் K.சரவணகுமார் நேரடி கண்காணிப்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரிகளை தேடி வந்த நிலையில்,
1.இளஞ்சிறார். 2.பாலசுந்தர் (22). 3.வேலா @ ஆதிவேலாயுதபெருமாள் (23), 4.கோபாலகிருஷ்ணன் (30) மற்றும் 5.நவநீதகிருஷ்ணன் @ நாகு (19) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையுண்ட நம்பி சில மாதங்களுக்கு முன்பு நடுக்கல்லூரில் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக மேலே குறிப்பிட்ட எதிரிகள் நம்பியை வெட்டி கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள எதிரிகளிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களும், ஒரு அரிவாளும் கைப்பற்றப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற எதிரிகளை தனிப்படையினர் தேடி வருவதோடு, விரைவில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.