‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!
தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் ‘நம்ம தூத்துக்குடி’ என்ற செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!
தூத்துக்குடியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., தூத்துக்குடி 3ஆம் கேட் அருகில், ஜெயராஜ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ‘செல்ஃபி பாயிண்ட்’டினை திறந்து வைத்தார். பின்னர் அவரது மொபைல் போனில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
அதனைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோரும் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அமைச்சர் கீதா ஜீவன்அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகநம்ம தூத்துக்குடி செல்ஃபி பாயிண்ட்பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி