BREAKING NEWS

நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்

நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கில் திரண்ட இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

தமிழகத்தில் நாளைய தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றாலும் சௌதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அதனை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.

நாகூரில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விரிவாக பொது வெளியில் நடைபெற்ற இந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இதில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

 

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். அதனால் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைத்து இஸ்லாமிய மக்களுமே மகிழ்ச்சியுடன் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )