BREAKING NEWS

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய சிறுவனை நாசரேத் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நாசரேத்தில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய சிறுவனை நாசரேத் பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

நாசரேத் மில் ரோடு – மணிநகர் பகுதியில் முட்புதரில் ஒரு பச்சிளம் குழந்தை அழுகிற சத்தம் கேட்டிருக்கிறது.

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பாலமுருகன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் சிவபாலு ( வயது 14 ) குழந்தையின் அழுகுரல் கேட்டு முட்புதரினுள் எட்டி பார்த்துள்ளான்.

அங்கே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை கிடந்தது. உடனே அந்த குழந்தையை தன்னுடைய கையால் எடுத்து வந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் குழந்தையை காண்பித்துள்ளான்.

இதுகுறித்து நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி விரைந்து வந்து குழந்தையை மீட்டார்.

பின்னர் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அந்தக் குழந்தையை தூத்துக்குடியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்.

சிறுவன் என்றும் பாராமல் தைரியமாக முட்புதரில் புகுந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சிறுவன் சிவபாலு மற்றும் அவனுடைய பெற்றோரையும் நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் நாசரேத் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து அழைத்து வந்து பாராட்டி பரிசு வழங்கினார். இச்சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பாக உள்ளது.

CATEGORIES
TAGS