நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தது தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேரில் வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஓ.பழனியம்மாள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரது மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் சீமான் அவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அவருடன் நாம் தமிழர் தேனி மண்டல பொறுப்பாளர் பிரேம் சந்தர் உள்ளிட்ட கட்சியை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
CATEGORIES அரசியல்
TAGS ஓ.பன்னீர்செல்வம்ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் மரணம்சீமான்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்நாம் தமிழர் கட்சி