நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,
நாளை குடியரசு தின விழா நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதையொட்டி இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் சிலர் தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கட்ச தீவுக்கு புறப்பட்டு செல்வதாக வந்தனர்.
இதை எடுத்து ராஜராஜ சோழன் சிலை பூங்காவே காவல்துறையினர் பூட்டு போட்டு பூட்டி வைத்தனர் ஆனால் போராட்டக்காரர்கள் மதில் சுவர் மேல் ஏறி குதித்து ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES அரசியல்
TAGS கட்ச தீவுகுற்றம்சிவசேனா கட்சிசிவசேனா மாநிலத் துணைத் தலைவர் புலவஞ்சி போஸ்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்