BREAKING NEWS

நிலக்கோட்டையில் அ. தி.மு.க 51வது ஆண்டு பொன்விழா பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. வினர் கொண்டாட்டம்.

நிலக்கோட்டையில் அ. தி.மு.க 51வது ஆண்டு பொன்விழா பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க. வினர் கொண்டாட்டம்.

 

 செய்தியாளர் ம.ராஜா.

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு பொன்விழா நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நிலக்கோட்டை நால் ரோட்டில் பட்டாசு வெடித்தும்,

 

மினி பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க கொடி கம்பத்தில் கொடியை ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

 

விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். பி. உதயகுமார் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அனைத்தும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்நிலையில் கடந்த காலத்தில் 3 முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒருமுறைகூட எதிர்க்கட்சியாக கூட இல்லாமல் இருந்ததுதான் திமுக இதுதான் வரலாறு.

 

தற்போது தமிழகத்தில் அரசியல் நிலை தொடர்ந்தால் வருகிற பாராளமன்ற தேர்தலிலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி நிச்சயமாக தி.மு.க படுதோல்வி அடையும் என சுட்டிக்காட்டி பேசினார்.

 

இவ்விழாவில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன்,

 

கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் தவமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி,மாவட்ட பொறுப்பாளர்கள் சிமியோன்,ஜேசுராஜ், சரவணகுமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செந்தில்குமார், சங்கையா, சக்திவேல், குணசீலன், திருமுருகன்,

 

ஜெயலலிதா பேரவை நகர பொறுப்பாளர்கள் மோகன்ராஜ், பந்தா முருகன் , ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஒன்றிய எம். ஜி. ஆர் மன்ற செயலாளர் காட்டு ராசா, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )