நிலக்கோட்டையில் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோடு அருகே உள்ள நடராஜர் பெருமாள் திருக்கோயிலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சியின் நிறுவனரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்த் பூரண நலம் பெற்று மீண்டும் மக்களிடம் தோன்ற வேண்டி சிறப்பு யாகம்,
சிறப்பு பூஜை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ஏ.வி. ஆர்.பழனி, வெள்ளைச்சாமி, வத்தலக்குண்டு தேமுதிக ஒன்றிய செயலாளர்கள் கருத்தப்பாண்டி,மணி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாசாணம், வித்யா முருகேந்திரன், நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் சிவா, முன்னாள் வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் சேர்மன் ராஜா, ஒன்றிய அவைத்தலைவர் மணிகண்டன், நிலக்கோட்டை நகர செயலாளர் முருகன் மற்றும் தே.மு.தி.க கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்:- நிலக்கோட்டை நடராஜர் கோயிலில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி பூஜை செய்த போது எடுத்த படம்