BREAKING NEWS

நிலக்கோட்டை பகுதி அருகே கொள்ளை நடந்த இடத்தையும், மணல் கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்.

நிலக்கோட்டை பகுதி அருகே கொள்ளை நடந்த இடத்தையும், மணல் கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி ஆத்தங்கரை தோட்ட குடியிருப்பில் உள்ள கண்ணன் என்பவர் வீட்டில் 21 பவுன் தங்க நகையும், 6 லட்ச ரூபாய் பணமும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

 

 

இதே போன்று அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகை வீர ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் மணல் திருட்டு நடப்பது என்பது சர்வ சாதாரண நிகழ்ச்சியாக நடந்ததையே கண்டித்து அணைப்பட்டி பொதுமக்கள் கண்டன போஸ்டர் ஒட்டி இருந்தனர்.

 

 

இதை அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நிலக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு முருகனுக்கு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது உடன் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட பலர் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )