BREAKING NEWS

நிலக்கோட்டை பெரியார் பிரதான கால்வாயில் மிதந்து வந்த கூலித் தொழிலாளி மர்மச்சாவு 20 கிலோ மீட்டர் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு உடல் மீட்பு.

நிலக்கோட்டை பெரியார் பிரதான கால்வாயில் மிதந்து வந்த கூலித் தொழிலாளி மர்மச்சாவு 20 கிலோ மீட்டர் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு உடல் மீட்பு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கண்ணாபட்டி அருகே செல்லும் வைகை அணையிலிருந்து வரும் பெரியார் பிரதான கால்வாயில் ஒரு மனித உடல் மிதந்து வந்தார்.

 

இதைப்பார்த்த கண்ணாபட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக விருவீடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 

 

அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் தலைமையிலான அணைப்பட்டி நோக்கி போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அந்த இடத்தையும் கடந்து அந்த உடல் இழுத்துச் செல்லப்பட்டது.

 

இதுகுறித்து உடனடியாக விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா அதற்கு நிலக்கோட்டை போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் விளாம்பட்டி போலீசாரும், நிலக்கோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் இணைந்து கால்வாயில் தேடிச் சென்றனர். கால்வாயில் மிதந்து சென்ற உடன் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை 11 கண் பாலத்தின் அருகே ஓரமாக தேங்கி நின்றது.

 

 

உடனடியாக தீயணைப்பு துறையும் போலீசாரும் கால்வாயில் குறித்து உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். இறந்த நபர் குறித்து விளாம்பட்டி போலீசார் விசாரித்தபோது இவர்

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கீழப்புதூர் சேர்ந்த செந்தில் குமார் வயது 42 இவர் கூலி தொழிலாளி ஆவார்.

 

இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் குளித்துக் கொண்டு இருந்தாரா? இல்லை தானாக குறித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா? எப்படி இறந்தார் என்ற நிலை மர்மமான இருக்கிறது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )