நெல்லையில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர் மணிகண்டன்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சபாநாயகர் அப்பாவு கர்ப்பிணிகளை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 150 கர்ப்பிணி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், முறுக்கு, வளையல் சேலை போன்ற சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
