BREAKING NEWS

நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.

நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.

திருநெல்வேலி பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் பத்தமடை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

 

மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் எம்.எஸ் சிராஜ் மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் அம்பை ஜலில், அம்பை தொகுதி தலைவர் செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் சுல்பிகர் அலி கலந்து கொண்டு பேசினார்.மாவட்டத்தின் சார்பாக முதற்கட்ட கட்சி நிதியை மாவட்டத்தின் முன்னிலை மண்டல தலைவர் பெற்றுக்கொண்டார்.

 

 

வர்த்தகர் அணி சார்பாக 2023 க்கான வருட காலண்டரை மாவட்டத்தின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டத்தில் கிழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கட்சிக்கு நிதிதிரட்டல் சம்மந்தமாக மாநிலத்தின் அறிவிப்பை நடைமுறை படுத்த புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிதி திரட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

 

பொங்கல் விழாவை முன்னிட்டு மணிமுத்தாறு, பாபநாசம், சுற்றுலா தளங்களை பொதுமக்கள் பயன் பெரும் வகையில் கூடுதல் பராமரிப்பு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.

 

 

இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் வள்ளியூர் சலிம், வள்ளியூர் நகர தலைவர் ஷேக், பத்தமடை நகர தலைவர் ஷெரிப்பு, சேரை நகர தலைவர் அஹமது மைதீன்,

 

அம்பை நகர தலைவர் நாசர், பொருளாளர் செய்யதலி வி.கே புரம் நகர நகர துணை தலைவர் பீர்ஷா பொருளாளர் சம்சுதின், வீரவநல்லூர் நகர துணை தலைவர் ஜெய்லானி, வீரவநல்லூர் நகர செயலாளர் நைனா முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இறுதியில் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் நன்றியுரையாற்றினார்.

 

CATEGORIES
TAGS