நெல்லை மாவட்டம்,ஏர்வாடியில் மூதாட்டியிடம் மோசடியாக வீட்டை எழுதி வாங்கிய கந்துவட்டி கும்பல்.

தமிழக அரசு கந்து வட்டிக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றியுள்ளது கந்துவட்டியால் சமீபத்தில் ஒரு காவலரே தற்கொலை செய்துள்ளார் “கந்துவட்டி ஆபரேஷன்” என்ற பெயரில் கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் வேலு செட்டியார் மனைவி இசக்கியம்மாள்(60) என்ற மூதாட்டியிடம் ஒரு லட்ச ரூபாய்க்காக இருபது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை வடுகச்சிமதிலைச் சார்ந்த கண்ணன் என்பவர் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளார் வட்டியுடன் சேர்த்து பணத்தை கொடுக்க சென்றபோது வீடு எனது வீடு எனக்கு விற்ற பிறகு எப்படி என் வீட்டில் நீ இருக்கிறாய் வீட்டை காலி செய் என மிரட்டியிருக்கிறார் பயந்துபோன மூதாட்டி நியாயம் தேடி ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் காவல்துறை கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மூதாட்டி இசக்கியம்மாளுக்கு நீதி கிடைக்க வழி செய்யட்டும்