நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 16 வது வார்டு பகுதியில் உள்ள அமுதம் 1 கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக
அம்பாசமுத்திரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று துவங்கியது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 16 வது வார்டு பகுதியில் உள்ள அமுதம் 1 கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
பச்சரிசி சர்க்கரை கரும்பு ஆகியவற்றுடன் 1000 ருபாய் ரொக்கப்பணம். வழங்கப்பட்டது. அம்பாசமுத்திரம் நகர்மன்றத் தலைவர் கே கே சி பிரபாகரன் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அவருடன் துணை தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி முன்னாள் கவுன்சிலர் சிவகுருநாதன் ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அம்பாசமுத்திரம்அரசியல்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்பொங்கல் தொகுப்பு வழங்கபடும் விழா