நெல்லை மாவட்டம் முக்கூடலில் எங்கள் நேரு புது காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை., சீரான குடிநீர் வழங்க ஆட்சியரிடம் மனு.
நெல்லை மாவட்டம் முக்கூடலில்
எங்கள் நேரு புது காலனி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு பல வருடங்களாக குடிநீர் பிரச்சனை இருக்கின்றது. இதனை பற்றி பலமுறை பஞ்சாயத்தில் கோரிக்கை அளித்தும் பயனில்லை.
தினமும் குறைந்த அளவு தண்ணீர் பள்ளமான பகுதில் மட்டும் வருகிறது. மேடான பகுதியில் வருவதில்லை. இதனால் வேலைக்கு செல்லும் பெரியவர் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் குடிநீர் வழங்கும் நேரம் மதியம் 1.30 மணிக்கும், சில நேரங்களில் 4 மணிக்கும் வருகிறது.
இதனால் வேலைக்கு செல்லும் வீடுகளில், குடிநீர் பிடிக்க யாரும் இருப்பதில்லை. கடந்த 6 நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு கொடுத்திருந்தோம். நகல் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே எங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சீரான குடிநீரை அனைவருக்கும் வழங்க, தக்க நடவடிக்கை எடுத்துக்குமாறு நேரு புது காலனி பொதுமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.