நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 14ஆம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொங்கல் பானை, அரிசி , சர்க்கரை , கரும்பு வழங்கபட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொங்கல் பொங்கியதும் அனைவரும் குலவையிட்டு ஆரவாரம் செய்தனர். மேலும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 150 நபர்களுக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் என பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS Dmkஅரசியல்சபாநாயகர் அப்பாவுசமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளைபொங்கல் திருநாள் விழாபொங்கல் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையம்