BREAKING NEWS

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.

பணகுடி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை பணகுடி போலீசார் விசாரணை.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.

 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் கூலி தொழிலாளி ஆவார் இவரது மகன் சிவன் ராஜ்(34) பட்டதாரி தான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற தளத்தை பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கினார் அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடிதாக கூறப்படுகிறது.

 

அதில் சிவன் ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளதாக தெரிகிறது பின்னர் நாம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடியதாக தெரிகிறது.

 

அதிலும் சிவன்ராஜ் தான் விளையாண்ட விளையாட்டிலும் தோல்வியுற்று தான் கடன் வாங்கிய பணத்தையும் இழந்துள்ளார் இதனால் நேற்று மணமுடைந்து தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் கூல்ட்ரிங்ஸ் கலந்து குடித்துள்ளார்.

 

மயங்கிய நிலையில் இருந்த சிவன்ராஜ் ஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இறந்த சிவன்ராஜ் குடும்பத்தில் ஒரு அக்கா ஒரு தங்கை இவர் தான் குடும்பத்தில் உள்ள ஆண்மகன் ஆவார்.

 

செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பணகுடி அதன் சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது தியுள்ளது.

CATEGORIES
TAGS