BREAKING NEWS

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.

ஈரோடு மாவட்டம்:

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்முரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பர்கூர் தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வெங்கடாசலம்.கேகே பழனிச்சாமி. முருகன். ஆகியோர் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

 

 

அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவூர் என்ற இடத்தில் புளிய மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த ரேவண்ணன் என்ற நபரை பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து பர்கூர் போலீசார் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செய்தனர்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS