பழனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பொங்கல் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டும் கோல போட்டி நடைபெற்றது.
இதில் அ மமு க கட்சியின் குக்கர் சின்னத்தை சிறப்பாக வரைபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் மேற்கு மாவட்ட செயலாளர் கே பி நல்லுசாமி ,கிழக்கு ஒன்றிய செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் முதல் மூன்று பரிசை வென்றவர்களுக்கு குக்கரும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு பரிசாக 10 நபர்களுக்கு குக்கர் வழங்கப்பட்டது .
தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிபன் பாக்ஸ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சசிதரன், சிவா, அறிவழகன் மற்றும் செந்தில் ஆகிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.