பழனியில் பி.வி.பி (BVB) பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 24ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி துணை பேராசிரியர் கோமதி கலந்து கொண்டார். முன்னதாக பள்ளியில் நடைபெற்ற அனைத்து வகை போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் லதா, பள்ளியின் அறங்காவலர்கள், நிர்வாகிகள், நிர்வாக அலுவலர் சிவக்குமார் , மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இதில் பேசிய சிறப்பு விருந்தினர் கோமதி மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கியதோடு , குட்டிக்கதைகள் கூறினார். மேலும் முதல்வர் லதா பள்ளியின் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.
இதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளின் முதல் நாள் கலை நிகழ்ச்சிகளாக பேச்சுப் போட்டிகள் ,கிராமிய கலை நிகழ்ச்சிகள் ,பரதநாட்டியம், ஆடல் பாடல், மற்றும் சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இரண்டாம் நாளான இன்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.