பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழக தலைவர் முனைவர் சே.பா.சபரிராஜ் தலைமையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மேலும் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி எஸ்.பரிதாசேக்முகமது, மாநில மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழாவில் பாலியல் வன்முறை நடைபெறாமல் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.