பழனியில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரமராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். மேலும் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் டெஸ்ட் பர்ச்சேஸ் முறை தடை செய்யப்பட வேண்டும், அபதாரம் விதிக்கும் முறையை இரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
பழனி மாவட்டத்தில் ஜே.பி. சரவணன் தலைமையில் இயங்கக்கூடிய வணிகர் சங்க பேரமைப்பு மட்டுமே பழனியில் செயல்படுகிறது.மேலும் சங்க கொடி மற்றும் புகைப்படங்களை ஜே.பி சரவணன் தலைமையிலான சங்க பொறுப்பாளர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வேற்று நபர்கள் சங்க பெயரையோ கொடியையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ தலைவர் ஹரிஹரமுத்து மாவட்ட தலைவர் சரவணன்,
மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், சுப்பிரமணியன், செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ் சித்தமருத்துவர் மகேந்திரன், மருத்துவர் விமல்குமார்,
கந்த விலாஸ் பாஸ்கரன்,ஜெபக்கணிராஜா, ரம்யாகிருஷ்ணன், செல்வம் ஸ்டோர் சம்பத், ராதாகிருஷ்ணன்,இளைஞர் அணி தவ்பிக் , தங்கராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.