பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடுற்றோர் தங்கும் விடுதியில் ஆயக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவின் தலைமையாக சமூக ஆர்வலர் மன்சூர் உசேன் வரவேற்புரையாக பொன். முருகானந்தம் சமத்துவ பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ஆயக்குடி கவுன்சிலர் அஜ்மத் அலி, பழனி கவுன்சிலர் ஹலோ டெய்லர் நடராஜன், ஈஸ்வரி,
திலகவதி, மற்றும் விழா நிகழ்ச்சியில் அபுல் கலாம் சர்தார், காஞ்சனா, ஆயை சபீக், சாதிக்அலி, பகவதி, ஆயை ராஜா முகமது, வீடற்றோர் இல்ல பொறுப்பாளர் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து அனைவரும் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்கள் இந்த பொங்கல் கொண்டாட்டத்தால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.