BREAKING NEWS

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.

பழனி திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் தெய்வத் தமிழ் பேரவை வேண்டுகோள் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழ் மந்திரங்களைக் கொண்டு குடமுழுக்கு முழுவதையும் நடத்த வேண்டும்.

 

 

கருவறைக்கு வெளியே கோபுர கலசத்திற்கும், வேள்வி சாலைக்கும் வெளியே தமிழ் ஓதுபவர்கள் பாடும் தேவார திருமுருகப் பாடல்களை காட்டி தமிழ் குடமுழுக்கு நடந்ததாக காட்டக்கூடாது .

 

 

மேலும் தமிழுக்கு எதிரான தீண்டாமையை கடைபிடிக்கும் ஒரு சாராருக்கும் தமிழ்நாடு அரசும் துணை போகக்கூடாது என்றும் அன்னை தமிழ் மந்திரம் பழனி ஆண்டவர் குடமுழுக்கில் ஒலிக்கச் செய்ய வேண்டும் போன்ற வேண்டுகோள்களை முன்வைத்து பழனி பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தெய்வத்தமிழ் பேரவை சார்பாக மந்திரங்கள் முழங்க கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

CATEGORIES
TAGS