பவானி நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பவானி நகர தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நகரச் செயலாளர் M.C.R. ராஜேந்திரன் தலைமையிலும், பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் சேகர், துணைச் செயலாளர் ராஜலிங்கம், நகர அமைப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.
பழைய பஸ் நிலையம் கூடுதுறை ரோடு, அந்தியூர் பிரிவு ரோடு, யூனியன் ஆபீஸ் அருகில், தலைமை மருத்துவமனை அருகில், திருவள்ளுவர் நகர், செங்காடு, வர்ணபுரம் மற்றும் புதிய பஸ் நிலையம் போன்ற இடங்களில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். கோவிந்தசாமி கட்சி கொடி ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர் அமைப்பாளர் ஆறுமுகம், மோகன், மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.