பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.

ஈரோடு மாவட்டம்,
பவானி நகர திமுக சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக கட்சி கொடியேற்றி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பவானி பழைய பஸ் நிலையம் முதல் புதிய பஸ் நிலையம் வரை உள்ள 27 வார்டு பகுதிகளிலும் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் அந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பலருக்கும் பொங்கல் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங் கோவன், அவை தலைவர் மாணிக்கராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் இந்திரஜித், மாவட்ட பிரதிநிதி நல்லசிவம்,
திமுக கவுன்சிலர்களான சுப்பிரமணி, கார்த்திகேயன், ரவி, மோகன்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளான தவமணி, ஆடிட்டர் முருகேஷ், சிங்காரம், கு. செல்வராஜ், ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS Dmkஅரசியல்ஈரோடு மாவட்டம்சமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகபவானி நகர திமுகபொங்கல் திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்