BREAKING NEWS

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.

 

 

 

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் பரமசிவம், பவானி நகர முன்னால் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் பவானி புதிய பஸ் நிலையம் அந்தியூர் பிரிவு ரோடு மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

 

 

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் வக்கீல் செங்கோட்டையன், பசுமை தாயக மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன், மூத்த நிர்வாகி அழகப்பன், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் சம்பத், பவானி நகர தலைவர் பிரகாஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பவானி நகர பொருளாளர் செல்வி நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS