பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அலுவலகங்கள் மீதான என்.ஐ.ஏ, இ.டி. ரெய்டை கண்டித்தும், கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அலுவலகங்கள் மீதான என்.ஐ.ஏ, இ.டி. ரெய்டை கண்டித்தும், கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்,
சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்காக தொடர்ச்சியாக பழிவாங்கும் நோக்கத்தில் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய அரசு மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத்துறை என்.ஐ.ஏ , இ.டி யை கண்டித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், முற்போக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு திண்டுக்கல் பேகம்பூர் காயிதே மில்லத் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநகர தலைவர் இலியாஸ் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொருளாளர் மெளலானா மெளலவி பி.நெளஷாத் அலி உலவி ஹழ்ரத் , ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட செயலாளர் அப்துர்ரகுமான் அல்தாபி , அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், தென்மண்டல அமைப்பாளருமான ஆர்.ரியாஸ்அகமது, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திண்டுக்கல் மாவட்ட தலைவர் எம்.சதாம் உசேன் , திண்டுக்கல் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஜமால் முகமது, திண்டுக்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்பரசு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் எம்.ஐ.மில்லத் அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அலுவலகங்கள் மீதான என்.ஐ.ஏ ரெய்டை கண்டித்தும், கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், எஸ்.டி.டி.யு மை வீரர் அப்துல்லா, காஜாமைதீன் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.