பாரதப் பிரதமரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.
காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதை ஒட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரை டி ஐ ஜி பொண்ணி திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பாரதப் பிரதமரின் வருகையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் பங்கேற்க உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வளாகம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
பாரதப் பிரதமர் வருகையை ஒட்டி போக்குவரத்து மாற்று ஏற்பாடுகளும் பொதுமக்கள் இடையூர் இல்லாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 24 மணி நேரமும் முழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS அரசியல்காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாஜகபிரதமர் மோடி