பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு மறுக்கப்படும் உரிமைகளை கண்டித்து களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன கோஷம் முழங்கும் ஆர்ப்பாட்டம்.

பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில் மக்களின் பிரச்சினைகளை பேசும பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் வலைகளை நசுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகரத்தின் சார்பாக கண்டன கோஷம் முழங்கும் ஆர்பாட்டம் கட்சி அலுவலகத்தின் முன்பு காலை 10.00 மணிக்கு நகர தலைவர் கமாலுதின் தலைமயில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய அரசுக்கு எதிராக நடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு மறுக்கப்படும் உரிமைகள். குரல்வளையை பிடித்து நசுக்கின்ற ஒன்றிய பாஜாக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் முழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் காஜா முகைதின் , மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பீமாஸ் உசேன், செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக், ஆரிப், கபிர் ஆகியோர் கலந்து கொண்டனர.