பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை – கடம்பூர் ராஜூ.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடல் கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்துக்கு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,
அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், முன்னிலையில் முனைவர் முன்னாள் அமைச்சர் கழக இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் யாரும் பார்த்திடத தேர்தலாக அமைந்துள்ளது. திகல் தொடர் மாதிரி தமிழ்நாடு மாறி உள்ளது அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் காணமல் போய்விட்டர்கள்.
அதிமுக 6 மாத குழந்தையாக திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
3 முறை இழந்த சின்னத்தை திரும்ப பெற்ற ஒரே கட்சி அதிமுக 2011 ல் தன்னை தனியே நின்று தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடித்த கட்சி அதிமுக எனக்கு பிறகு 100 ஆண்டுகள் ஆன பின்னும் இந்த இயக்கம் இயங்கும் அந்த திமுக திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலாவை போல் ஈரோடு கிழக்கு பார்முலா என்று புதிய பார்முலாவை கொண்டு வந்துள்ளது. வாக்களித்த வாக்காளர்களைக் இரு மாப்பாக பேசி உள்ளனர் பொன்முடி. குப்பைக்கு வரி போட்ட ஊரு ஈரோடு அந்த அளவிற்கு மோசமாக தொகுதியை வைத்து உள்ளனர்.
பெரியார் பிறந்த மண்ணில் டோக்கன் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவர்கள் போல வாக்களர்கள் கொட்டகையில் அடைத்து வைத்து மொய்யி கையி மறக்காதீர்கள் என்று வாக்கு சேகரிப்பு..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ், விசிக,கம்யூனிஸ்ட் கூட்டணி வைக்க வில்லை மாநில தேர்தல் ஆணையத்திடம் தான் கூட்டணி வைத்தார்கள்.
இலங்கை ஈழ தமிழர்கள் வாழ்க்கையை ஈரழித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.. இறந்த பிரபாகரன் ஆன்மா மன்னிக்கதோ என்ற காரணத்தினால் தான் என்னவோ வைகோ பிரச்சாரத்திற்கு வரவில்லை
இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டனா என்று கேட்டவர் ஈவிகேஎஸ்..
ஈரோடு மாடல் எலக்ஷ்சன் போல் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை ஜனநாயகத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.
2026 வரை திமுக ஆட்சி நீடித்தால் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று பேசினார்..
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கழக இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் பேச்சு..
திராவிட மாடல் என்பதற்கு என்ன ஆர்த்தம் என்பது எந்த அமைச்சருக்கவது தெரியுமா நேருக்கு நேர் விவாதிக்க தயார்..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட மாடல் கொள்கை வெற்றி பெற்று உள்ளதா இல்லை கொழுசு வெற்றி பெற்று உள்ளது..
வாக்காளர் எஜமானர்களை வேலைகாரர்கள் ஆக்கியதே திமுக இந்திய தேர்தலில் கருப்பு நாள் திருமங்கலம் இடைத்தேர்தல் அதேபோலத்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்று பேசினார்..
பொதுக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன் , மோகன், ஒன்றிய செயலாளர் வண்டான கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், இளைஞர் பாசறை நிர்வாகி விஜய மூர்த்தி, பழனி முருகன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,
முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர மாணவரணி செயலாளர் விநாயக முருகன், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், நகர தகவல் தொழில்நுட்ப அணி குழந்தை ராஜ் ஆகியோர் நன்றி உரையாற்றினர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன் செய்திருந்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.