BREAKING NEWS

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!

புதிய நீதிகட்சி தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 பேருக்கு போலீஸ் வலை!

புதிய நீதிக் கட்சியின் தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுவை குடியாத்தம் நத்தம் ஆதிபகவன் இல்லம் அருகே 23.3.2025 அன்று மதியம் அழைத்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததற்காக, கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகி என்கிற பா.மகேந்திரன், நகர மாணவரணி செயலாளர் புவனேஸ்வரிபேட்டை நந்தகுமார் ஆகிய 2 பேர் மீது நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு வாட்ஸ் அப் வாயிலாக வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியும், வீட்டுக்கு 10 பேரை அனுப்பி கல் வீசியதாகவும் நேதாஜி சவுக் இ.சேவை மைய நிர்வாகியும், புதிய நீதிக் கட்சி இளைஞரணி செயலாளருமான ஆர்.ராஜ்குமார் மீது வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும், சைபர் கிரைம் போலீஸிலும் பட்டு பாபு புகார் தெரிவித்துள்ளார்.

பட்டு பாபு கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அந்த 10 பேரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதலால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் குடியாத்தம் போலீஸாருக்கு அந்த பத்து பேரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று புதிய நீதி கட்சி சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 10 பேர் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது சாட்டையை சுழற்றுவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this…

CATEGORIES
TAGS