புனித சகாய அன்னை திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்த்திருவிழா!

வேலூர் மறை மாவட்டம், கட்டுப்படியில் புனித சகாய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் 85 ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து கடந்த 23ஆம் தேதி நற்கருணை பெரு விழா நடந்தது. இதை தொடர்ந்து 24 ஆம் தேதி ஆண்டு பெருவிழா நடந்தது. இதில் தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக நடந்தது.
மின் விளக்குகளால் ஆலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சகாய அன்னை நகர் முழுவதும் வலம் வந்தார். அனைத்து மக்களின் தாய் மரியா என்ற தலைப்பில் வேலூர் முதன்மை குரு பேரருட்தந்தை எம். ஜான் நிக்கோலஸ், மண்ணின் மைந்தர்கள் மற்றும் மறைக்கோட்ட குழுக்கள், பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கட்டுபடி பங்குத்தந்தை அருட்பணி எஸ். மலையப்பன் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆடம்பர திருவிழா ,கூட்டு திருப்பலி நடந்தது.
சிறுவர்களுக்கு புது நன்மையும் வழங்கப்பட்டது. இதில் ஜெபமாலை மற்றும் திருப்பலியும் நடந்தது.
இரவு 8 மணி அளவில் புனித சகாய அன்னையின் மலர் அலங்கார தேர்பவனி நடந்தது. இதைத்தொடர்ந்து கட்டுப்படி பங்குத்தந்தை அருட்பணி எஸ். மலையப்பன் தலைமை வகித்து கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் வழங்கினார். இதில் பங்கு மக்கள் கலந்து கொண்டு புனித சகாய அன்னையின் அருளை பெற்றனர்.