BREAKING NEWS

புரட்டாசி முதல் சனிவாரவிழாவை முன்னிட்டு பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதா கிருஷ்ணருக்கு துளசி அலங்காரம்.

புரட்டாசி முதல் சனிவாரவிழாவை முன்னிட்டு பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதா கிருஷ்ணருக்கு துளசி அலங்காரம்.

 

 

தேனி மாவட்டம் பெரியகுளம் நாமத்வார் பிராத்தனை மையத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு கிருஷ்ணன் ராதைக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து துளசி மாலையால் கிருஷ்ணன் மற்றும் ராதைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாவளிகள் நடைபெற்றது.

 

பின்னர் உலக நன்மை கல்வி தொழில் உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

 

இந்த கூட்டு பிரார்த்தனையின் போது ஹரே ராம ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை அனைத்து பக்தர்களும் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )