பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.

செய்தியாளர் செங்கைஷங்கர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே கோபாலகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் சுதர்சனம் வயது (63)
இவர் தன் மனைவியுடன் சென்னை சூலைமேட்டில் உள்ள மகளை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று வீடு திரும்பிய சுதர்சனம் மற்றும் அவரது மனைவி வீட்டின் பூட்டு உடைக்க பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்ர் பின்பு
உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்க பட்டு உள்ளே இருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டரை லட்சரூபாய் ரொக்க பணம் , பூஜை அறையில் இருந்த 2வெள்ளி குத்து விளக்குகள் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த சுதர்சனம் இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்
இதற்கிடையே பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்று நகை பணம் எதுவும் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டு சுதர்சனம் வீட்டில் கைவரிசையை காட்டியது குறிப்பிடத்தக்கது.