பெரியாரின் 48 வது நினைவு நாள் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 48 வது நினைவுநாளை முன்னிட்டு சனிக்கிழமை குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் பி.கல்யாணம்.ஒன்றிய செயலாளர் குமரா.வைத்தி.பேரூர் செயலாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய தலைவர் கொக்கூர் முருகையன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட காங்கிரஸ் துணைச்செயலாளர் சண்முகம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 48வது நினைவுநாளை முன்னிட்டு குத்தாலத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு திமுக கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம்.