பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி வன்மத்தோடு கேள்வி கேட்கப்பட்டதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்டத் தலைவர் விக்னேஷ் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதி எது என சாதி வன்பத்தோடு கேள்வி கேட்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
