பேரணாம்பட்டில் பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராத தனியார் பேருந்து நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பேரணாம்பட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஆம்பூருக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டது. இதன் நடத்துநராக வினோத்குமார் என்பவர் செயல்பட்டதாக தெரிய வருகிறது. இவர் பெரும்பாலான பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதே நடத்துநர் மீது இதுகுறித்து இதேபோல பல பயணிகளுக்கு மீதி சில்லரையை திருப்பித் தராததால் இந்த தனியார் பேருந்தின் அலுவலகமான குடியாத்தம் புது பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பேருந்தின் அலுவலகத்தில் பயணிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரை ஏற்றுக் கொண்ட தனியார் பேருந்து நிலைய மேலாளர் ஜெயக்குமார் என்பவர் எதையோ வெட்டி முறிப்பது போல நான் நடவடிக்கை எடுக்கிறேன்.
அவர் மீது நிறைய புகார்கள் வருகிறது. நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஆனால் நடத்துநர் வினோத்குமார் மீதி சில்லரையை பயணிகளுக்கு திருப்பித் தராமல் அடிக்கும் கொள்ளையில் மேலாளர் ஜெயக்குமாருக்கும் பங்கு உள்ளது போல் தெரிவதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. நடத்துநர் வினோத்குமார் அவரது பசியையும்,
அவரது குடும்பத்தாரின் பசியையும் அவரது சம்பளத்தில்தான் போக்க வேண்டுமே தவிர அடுத்தவர் பணத்தில் அதாவது மீதி சில்லரையை திருப்பித் தராமல் அடுத்தவர் பணத்தில் தனது பசியையும் தனது குடும்பத்தாரின் பசியையும் வினோத்குமார் போக்கினால் அதற்கு பெயரே வேறு.
இவரை போன்ற ஆட்களை மும்பை மாநகரம் வரவேற்கிறது. அங்கு இவர் சென்றால் இவர் எதிர்பார்க்ககும் சம்பளம் அவருக்கு கிடைத்துவிடும்.
எனவே இவரைப் போன்றவர்கள் மும்பைக்கு சென்று வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்றும் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்